சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் முழக்கம் - கடைசியில் மேயர் பிரியா அளித்த உறுதி

x

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்ட விதிகள் திருத்தத்தினால் சென்னை மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் உரிமை பறிபோகும் என காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்ட விதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜசேகர், இதனால் சென்னை மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சட்டவிதிகள் திருத்தத்தை ஏற்க முடியாது என மாமன்றத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்