போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை | காவல் ஆணையர் எச்சரிக்கை

x

பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்கள் விழிப்புணர்வு மணல் சிற்ப கண்காட்சியை சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதை பொருட்களின் விற்பனை சமீபகாலங்களாக அதிகரித்து வருவதாகவும், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்