மனைவியுடன் முற்றிய சண்டை... ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரும், சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டில் வசித்து வந்தார்.
  • இதனிடையே, கௌசல்யாவை சந்திக்க மணி வந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
  • இதனால் ஆத்திரமடைந்த மணி, இரண்டு மாத குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
  • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்