சர்வ சாதாரணமாக கேமராவை திருடி சென்ற இளைஞர்... திருமண மண்டபத்தில் புகைப்பட கலைஞரின் கேமரா திருட்டு - சிசிடிவி வெளியீடு

x

திருமண மண்டபத்தில் புகைப்பட கலைஞரின் கேமராவை இளைஞர் ஒருவர் சர்வ சாதாரணமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவெற்றியூரை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் நந்தகுமார். இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த நிலையில், அருகில் உள்ள நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த கேமரா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இளைஞர் ஒருவர் கேமராவை திருடி செல்வது பதிவாகியிருந்த நிலையில், இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்