திருடச் சென்ற வீட்டிலேயே இப்படியா? சென்னையில் திருடன் செய்த அலப்பறை.. வீடு திரும்பிய உரிமையாளருக்கு ஷாக்

x
  • சென்னை, அடையாறில் திருடச் சென்ற வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு குடிபோதையில் உறங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
  • கஸ்துரிபாய் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் நரேன். இவரது பெற்றோரும் அதே குடியிருப்பில் வசித்து வருகின்றனர்
  • . சில நாள்களுக்கு முன்பு கார்த்திக் நரேனின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர்.
  • பின்னர் அவர்கள் வீடு திரும்பும் நேரம் குறித்து கார்த்திக்கிற்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்களது வீட்டின் கதவை கார்த்திக் திறந்து வைத்து சென்றுள்ளார்.
  • இதனிடையே, வீடு திரும்பிய அவரது பெற்றோர் தங்கள் படுக்கையறையில் அடையாளம் தெரியாத நபர் உறங்கிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்நபரை எழுப்ப முயன்றனர்.
  • அப்போது அந்நபர் தப்பிச் சென்று அதே குடியிருப்பில் பதுங்கியுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பதுங்கி இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
  • இதில் அவர் பெயர் ஏழுமலை என்பதும் திருடுவதற்காக வந்த வீட்டில் சாப்பிட்டு விட்டு போதையில் தூங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஏழுமலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்