டிராக்டரில் 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல் - சிக்கிய ஊராட்சிமன்ற து.தலைவரின் கணவர்

• மதுராந்தகம் அருகே, ரேஷன் அரிசியை கடத்தியதாக, ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். • செங்கல்பட்டு மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், டிராக்டர் மூலம் கடத்தப்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. • இதனிடையே, ரேசன் அரிசியை கடத்தியதாக, கரசங்கால் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விமல்ராஜை கைது செய்த ஒரத்தி போலீசார், குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com