செங்கல்பட்டு விஷ சாராயம் விவகாரம்.. டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுராந்தகம் அடுத்த சித்தாமூரைச் சுற்றியுள்ள பெருக்கரனை, புத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலியாகினர். இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2 உதவி ஆய்வாளர்களில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து சிவசக்தி புதிய DSPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்