நமீபியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய சிறுத்தைகள்

x

தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி கடந்த ஆண்டு 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 ஆண் சிறுத்தைகள், 5 பெண் சிறுத்தைகள் என 12 சிறுத்தைகள் நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய சிறுத்தைகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரிக்கப்பட்ட பின்னர், சிறுத்தைகள் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்