குற்றவாளிகளுக்கு செக்மேட்...சென்னை மாநகர காவல் அதிரடி | Chennai Police

x

சென்னையில் 43 இடங்களில், புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் சரகத்திற்கு உட்பட்ட 43 இடங்களில், நவீன வசதி கொண்ட129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த கேமராக்கள் பழுதடைந்தாலோ அல்லது யாரேனும் சேதப்படுத்தினாலோ, சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தியாக தகவல் வந்துவிடும் என குறிப்பிட்டார். இந்த சிசிடிவி கேமராக்களில் வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்