மின்கம்பத்தில் உரசிய தேர்.. கதி கலங்கி போன பக்தர்கள்-அமைச்சர் பங்கேற்ற தேரோட்டதில் அதிர்ச்சி

x

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சி - சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வெள்ளக்கோட்டை என்ற பகுதியில் வரும் பொழுது தேர் மின்சார கம்பியில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், மின் ஊழியர்கள் முன்கூட்டியே மின்சாரத்தை துண்டித்து கவனித்து வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்