"திருமண மண்டபத்தின் பெயரை மாற்று" ஓனருக்கு விசிக பிரமுகர் பகீர் மிரட்டல்..முகநூலில் போராட்டத்திற்கு அழைப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, தனியார் திருமண மண்டபத்தின் பெயரை மாற்றச் சொல்லி, மண்டபத்தின் உரிமையாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்பிபேட்டையில் 6 மாதங்களாக இயங்கி வரும் அந்த மண்டபத்தின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இளையமாறன் என்பவர், மண்டபத்தின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்கும்படி மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். மேலும் அந்த உரையாடலை முகநூலில் பக்கத்தில் பகிர்ந்து, வெளிப்படையாக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, அவர் மீது மண்டபத்தின் உரிமையாளர், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Next Story