"சந்திரயான் II மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

x

சந்திரயான் II மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா என்பது குறித்து இஸ்ரோவிடம் அறிக்கை பெற்று தெரிவிக்க மத்திய அரசு தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் , சந்திரயான் II மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா என்பது குறித்து விண்வெளி ஆராய்ச்சி துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்