"சந்திராயன் 3 விரைவில் ஏவப்படவுள்ளது" - இஸ்ரோவின் துணை இயக்குனர் வெங்கட்ராமன் தகவல்

x

படூரில் உள்ள தனியார் கல்லூரியில், உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ துணை இயக்குனர் வெங்கட்ராமன், சந்திராயன் 3 விண்கலம் மிக விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ளதாக தெரிவித்தார்.

சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனின் தென் பகுதியில் தரையிறக்க முடிவெடுத்துள்ளதாகவும், அது இதுவரை யாரும் எடுக்காத முயற்சி எனவும் கூறியுள்ள வெங்கட்ராமன், இதற்காக சந்திரனின் தென் பகுதியில் ஆய்வு செய்வதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்