சந்திரபாபு நாயுடு திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் | chandrababu naidu | Andhara Pradesh

x

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில், மக்களை சந்திக்க போலீசார் தடை விதித்த‌தால் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தெலுங்கு தேச கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, தன்னுடைய குப்பம் தொகுதியில் 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திறந்த வாகனத்தில் செல்ல போலீசார் தடை விதித்த‌தால், நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், குடிப்பள்ளியில் பாதயாத்திரை மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்ட போது, போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு, திடீரென தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்


Next Story

மேலும் செய்திகள்