சந்திரபாபு நாயுடு பேரணி விபத்து விவகாரம் , "முழு காரணம் சந்திரபாபு நாயுடு தான்" - அமைச்சர் ரோஜா

x

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியான நிலையில், இந்த விபத்துக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்...

ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விதிமுறைகளைப் பின்பற்றாமல் நேற்று இரவு நடந்த பேரணியில் ஏற்பட்ட விபத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் முழு காரணம் என்பதால், அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 கோடி ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்