கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு - நிவாரணம் அறிவித்த சந்திரபாபு நாயுடு

x

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில், பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அதேபோல ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்