அரசாணையை எரித்து போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

x

ஆந்திராவில் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த அரசாணையை எரித்து, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போகி கொண்டாடிய சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து ஆந்திர மாநில அரசாணையை வெளியிட்டது.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனது சொந்த ஊரான நாராவாரி பள்ளியில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போகி கொண்டாடினர்.

தொண்டர்கள் சூழ போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு, அரசாணையை எரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்