கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட பேருந்து - பலியான ஓட்டுநர் நடத்துநர் - பயணிகளின் நிலை..?

x

சண்டிகரிலிருந்து மணாலி வரை சென்று கொண்டிருந்த பஞ்சாப் மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதையடுத்து காணாமல் போன பேருந்தைத் தேடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. பேருந்தைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். கடைசியாக அந்தப் பேருந்து 2 நாட்களுக்கு முன்பு சண்டிகர் மணாலி தேசிய நெடுஞ்சாலையில் காணப்பட்டது. அதன் பிறகு அந்த பேருந்தை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாயமான பேருந்து பியாஸ் ஆற்றின் நடுவே கவிழ்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தின் காரணமாக வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவருமே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்