நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி... பிரியாணியுடன் அளிக்கப்பட்ட பிரியாவிடை - வித்தியாசமான போட்டி - மகிழ்ச்சியில் மாணவர்கள்

x

தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கு பிரியாணியுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டயபடிப்பு முடித்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாணவ, மாணவிகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு, பிரியாணி ஊட்டி விடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெறுவதற்காக, மாணவ, மாணவிகள் தங்கள் நண்பர்களுக்கு பிரியாணி ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்