சென்னை வரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் மத்திய குழு

x

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறப்பு குழு வந்துள்ளது.


  • பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்கின்றனர்.
  • சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடக்கிறது.
  • இந்தக் கூட்டத்தில் பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
  • தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதமரின் நிகழ்ச்சிகளின் நேரங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
  • ஆனால் பிரதமர் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை நகருக்குள் சாலை வழி பயணத்தை கூடிய மட்டிலும் தவிர்த்து ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்