மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

x
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியின் கூடுதல் தவணையை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்கிறது. 2023 ஜனவரி 01 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
  • அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு கட்டும் விதமாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால் 47 லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்