கவனத்தை திசை திருப்பி செல்போன் திருட்டு.. உணவகத்தில் கைவரிசை காட்டிய பலே தம்பதி - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

நாகையில் உணவக உரிமையாளர் கவனத்தை திசை திருப்பி விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பரவையில் உள்ள உணவகத்திற்கு ஒரு தம்பதி சாப்பிட வந்தனர். அப்போது ஓட்டல் உரிமையாளரான வாசுகி தன் செல்போனை டேபிள் மீது வைத்து விட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் அவரின் கவனத்தை திசை திருப்பி அந்த தம்பதி செல்போனை திருடிச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்