#BREAKING | "பணியின் போது செல்போனுக்கு தடை" - சென்னை கமிஷனர் அதிரடி

x

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல் பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கைள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். இதை வலியுறுத்தி, இன்றும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுஇந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர். பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும்இந்த கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டு குறிப்பாக. சட்டம் & ஒழுங்கு. பாதுகாப்புப் பணி. முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி. கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நியமிக்கும்போதும். பணியை பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரிசெய்வதும். போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது என்பதால் இச்சமயங்களில், தொலைபேசியைப் பயன்படுத்துவது காவலர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.எனவே, போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள காவலர்கள் தொலைபேசியை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே. அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணிபுரியும் காவல் காவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்த வித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும், இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்டியும், தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இதை படித்துக் காட்டியும், இந்த அறிவுரையைக் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்