மூதாட்டியிடம் செயினை பறித்த மூன்று திருடர்கள் - பைக்கில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்

x

குமரி மாவட்டத்தில், மூதாட்டியிடமிருந்து 2 சவரன் நகையை 3 பேர் பறித்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்தவர் சோபனா.

62 வயது மூதாட்டியான இவர், இன்று காலை பால் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது, இவரிடமிருந்து 2 சவரன் தங்க சங்கிலியை 3 பேர் பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சோபனா போலீசில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்