நைசாக பேச்சு கொடுத்து கடைகளில் கைவரிசை காட்டிய அபேஸ் இரட்டையரின் சிசிடிவி காட்சிகள்

x

தாம்பரம் அருகே கடை வியாபாரிகளின் கவனத்தை திசை திருப்பி, ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவஞ்சேரி பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், கல்லாவில் இருந்த 49 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபாணியில், குளிர்பான மொத்த விற்பனை கடையில் புகுந்த அவர்கள், ஒரு லட்சம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்