"பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமிராக்கள்" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

x

சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 412 சவரன் தங்க நகைகள் மற்றும் 35 லட்சம் ரூபாயை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டு, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பிரபல தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்து தலைமறைவான அகஸ்டின் சிரில், ராபின் கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்து, 215 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், டோல்கேட்டில் உள்ள பருப்பு வர்த்தக நிறுவனத்தில், 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கையாடல் செய்த 3 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 197 சவரன் நகைகள், 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்