சாமி சிலையின் நெற்றிக்குள் சிசிடிவி கேமரா - கொந்தளித்த திருவண்ணாமலை பக்தர்கள்

x

திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு, சிசிடிவி பொருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு, கண்காணிப்பு கேமராவை கோயில் நிர்வாகம் பொறுத்தியுள்ளது.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஊழியர்கள் உடனடியாக துவாரபாலகர் நெற்றியில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி வேறு இடத்தில் மாற்றி பொருத்தியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்