2ஜி வழக்கின் மேல்முறையீடு மனு - டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ கோரிக்கை

x
  • 2ஜி வழக்கின் மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
  • 2ஜிவழக்கு - சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்தார்.
  • இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
  • அதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 2 ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களுக்கு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது.
  • இதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்