48 மணி நேரத்தில் 4 உயிரை காவு வாங்கிய காவிரி

x

ஒகேனக்கலில், காவிரி ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். காவிரி ஆற்றில் குளிக்கும்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், சந்திரசேகரின் உடலை மீட்டனர். இதனிடையே, கடந்த 48 மணி நேரத்தில், காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்