தீ விபத்தில் சாம்பலான சூதாட்ட விடுதி - மனதை உலுக்கும் பலி எண்ணிக்கை

x

க்ராண்ட் டைமண்ட் சிட்டி கேசினோ ஓட்டல் என்ற சூதாட்ட விடுதியில் கடும் தீ விபத்து ஏற்பட்டது... ஆரம்பத்தில் முதல் தளத்தில் பரவத் துவங்கிய தீ, வெகு விரைவாக கட்டடம் முழுவதையும் ஆட்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் கருகி பலியான நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இறந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்