ஈபிஎஸ்-ற்கு பண கிரீடம்... ராஜாவாக மாற்றிய தொண்டர்கள்

x

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பணமாலை, பண கிரீடம் அணிவித்து ராஜாவைப் போல் அதிமுகவினர் கொண்டாடினர்... அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-ஐ சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்திக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்... கடலூர் மேற்கு மாவட்டம் சார்பாக எம்.எல்.ஏ அருள்மொழித் தேவன் தலைமையில் பிறகட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் நூற்றுக்கணக்கானோர் ஈபிஎஸ் தலைமையில் இணைந்தனர்... அப்போது பணத்தால் ஆன மாலை மற்றும் கிரீடம் ஈபிஎஸ்க்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதுவதால் அப்பகுதியே திருவிழா போல் காட்சியளிக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்