யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக வழக்கு... நாஞ்சில் விஜயனுக்கு நீதிமன்றம் உத்தரவு

x

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக எழுந்த புகாரில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, வளசரவாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்