மனநலம் பாதித்தவரை கன்னத்தில் அறைந்ததாக நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்கு

x

சிதம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக தீட்சிதர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கார்வண்ணன் என்பவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.அப்போது, கோயிலில் சாமி வீதி உலா வந்த போது, கார்வண்ணன் எதிரில் நின்றதாக கூறப்படுகிறது. உடனே, தீட்சிதர்கள் 2 பேர் அவரை கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது.இதில், காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கார்வண்ணன் சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்படும் நிலையில், தீட்சிதர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்