தேனி எம்பி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. மறுப்பு தெரிவித்த ரவீந்திரநாத்

x

தேனி மக்களவை தொகுதியி ல் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 76 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா நடந்தும் தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, ரவீந்தரநாத் 3 நாட்களாக நேரில் ஆஜராகி, குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்