தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

x
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட மூவாயிரம் பேர் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • திமுக அரசைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  • அதன் ஒரு பகுதியாக ஊர்வலம் சென்ற பாஜகவினர், போர்நினைவு சின்னம் அருகே ராணுவ வீரர் பிரபுவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • இந்நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட மூவாயிரம் பேர் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நுங்கம்பாக்கத்தில் போராட்டம் மேற்கொண்டது தொடர்பாக பாஜக-வைச் சேர்ந்த 42 பேர் இரு பிரிவுகளில் வழக்கு பாய்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்