பஞ்சாப் மாநிலத்தில் கார் மோதி கவிழ்ந்த கண்டெய்னர்....கண்டெய்னருக்குள் புகுந்த மற்றொரு கார் - பதைபதைப்பு காட்சிகள்

x

பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் குறுக்காக திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரி கவிழுந்த விபத்தில், அவ்வழியாக சென்ற கார் நசுங்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பக்வாரா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்றது. அப்பொழுது எதிர்சாலையில் கார் ஒன்றும் வந்து கொண்டிருந்தது.

சாலையில் வேகத்தை குறைக்காமல் கண்டெய்னர் லாரி திரும்பியதால் நிலைத்தடுமாறி, அவ்வழியாக வந்த கார் மீது விழுந்தது. கார் முழுவதுமாக நசுங்கிய நிலையில், அதில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மற்றொரு கார் சிறு சேதாரத்துடன் தப்பியது. விபத்தில் இறந்தவர்கள் குருகிர்பால் அவரது மனைவி மற்றும் மகன் என்பது தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்