அசுரவேகத்தில் பாய்ந்து வந்த கார்.. இன்னொரு கார் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து

x

சென்னை அண்ணாசாலையில் அதிவேகமாக சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை, சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஹரிஸ் என்பவர் தனது நண்பருடன் காரில் பயணித்த நிலையில், அண்ணாசாலை மசூதி அருகே மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். ஹரிஸ் பயணித்த கார் அதிவேகமாக சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்