கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மீண்டும் எதிர்ப்பு

x

தென்காசி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது.

பின்னர் முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வைத்தும், துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளை கேப்டன் மில்லர் படக்குழுவினர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஏராளமான உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறுவதாக குற்றம்சாட்டும் இளைஞர்கள், சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் கொண்டாடும் வேளையில், வன உயிரினங்களை அச்சுறுத்தும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்