“1 மாசம் EMI கட்ட வக்கில்ல.. போய் பிச்சை எடுத்து கட்டு“ - கஸ்டமரை அவமானப்படுத்திய பைனான்ஸ் ஊழியர்

x

ராமநாதபுரம் அருகே கடனுக்கான 1 மாத தவணையை செலுத்தாத லாரி ஓட்டுனரை, தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆபாசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலுள்ள தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான எடிசன், தவணையை சரியாக செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது லாரி எப்.சி சென்றுள்ளதால், ஒரு மாத தவணையை அவரால் செலுத்த முடியவில்லை. இதனையடுத்து அவரை தொடர்பு கொண்ட பைனான்ஸ் நிறுவன ஊழியரான பாலாஜி, எடிசனையும் அவரது குடும்பத்தாரையும் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் பிச்சையெடுத்து பணத்தை கட்டுமாறும், பணத்தை கட்டவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எடிசன் போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆபாசமாக பேசும் ஆடியோ, தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்