இனி பழங்களும் வாங்க முடியாதா? - காய்கறிகளை ஓவர் டேக் செய்யும் பழங்கள்

x

வேலூரில், காய்கறிகளுக்கு போட்டியாக பழ வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி குடியாத்தம் சந்தையில் ஆப்பிள் ஒரு கிலோ 260 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாதுளை 200 முதல் 240 ரூபாய் வரையிலும், ஆரஞ்சு 120 முதல் 140 ரூபாய் வரையிலும், சாத்துக்குடி 100 ரூபாய் எனவும் விற்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மழைபெய்து வருவதால், வரத்து குறைந்துள்ளதாகவும், இதனால் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்