3 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து..மறு அப்பீல் செய்து உறுதியளித்த நிர்வாகம்

x

திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரியில் குறைபாடுகள் களைந்து ஆவணங்கள் அனுப்ப‌ப்பட்டுள்ளதால், அங்கீகாரம் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரியில் ஆதார் பயோமெட்ரிக் கணக்கீடு செய்வதில்லை என்பதால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மருத்துவக் கல்லூரி தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு மறு அப்பீல் செய்ய உத்தரவிட்டிருந்த‌து. அதன் அடிப்படையில் தற்போது ஆதார் பயோமெட்ரிக் பதிவேடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சரி செய்துள்ளது. அதற்கான ஆவணங்களை அனுப்பியுள்ளதாகவும், விரைவில் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்