பற்றி எரியும் காட்டுத்தீ.. சர்வதேச உதவி கேட்கும் கனடா

x

கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க, தென்னாப்பிரிக்காவில் இருந்து தீயணைப்பு வீரர்கள், அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த பற்றிய காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அந்நாட்டு வீரர்கள் 900-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும், சுமார் 24 மில்லியன் ஏக்கர் எரிந்து நாசமானது. இந்த நிலையில் தீயை அணைக்க சர்வதேச உதவியைக் கோரினர். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் இருந்து, தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் கனடா புறப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்