நீங்களே இப்படி செய்யலாமா..? - அரசு ஊழியர்களை சுற்றி வளைத்த போலீஸ்

x

சிவகங்கை அருகே பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில், அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், கள்ள மணக்குடி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு இரு சக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்கள், 5 ஆயிரத்து 380 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்