உயிர்களை பலிகொண்ட சூதாட்ட விடுதி..! - தீயில் கருகிய 19 உடல்கள்... நெஞ்சை உலுக்கும் சோகம்...

x

கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது...

போய்ப்பட் நகர சூதாட்ட விடுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 12 மணி நேரமாக பரவிய தீயில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்... முதல் தளத்தில் பரவத் துவங்கிய தீயானது அதி விரைவாக கட்டடம் முழுவதும் பற்றியது. உள்ளே சிக்கிக் கொண்டவர்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் ஜன்னல்கள் வழியாகவும், கட்டடத்தின் மேலிருந்தும் கீழே குதித்தனர்... தாய்லாந்து, சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியாகியுள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்