திருடனை விரட்டி பிடித்த பெண் காவலர் - டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு

x

தாம்பரத்தில், செல்போன் திருடனை விரட்டி பிடித்த பெண் காவலரை, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில், பயணியின் செல்போனை, வடமாநில நபர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அந்த நபரை காவலர் காளீஸ்வரி விரட்டி பிடித்துள்ளார். இதனையடுத்து காளீஸ்வரியை டிஜிபி அலுவலகத்திற்கு அழைத்த டிஜிபி சைலேந்திர பாபு, அவருக்கு சான்றிதழும், வெகுமதியும் அளித்து பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்