திடீரென வெடித்த பேருந்து டயர்..முறிந்த பயணியின் கால் - சேலத்தில் பரபரப்பு

ஆத்தூர் அருகே தனியார் பேருந்தின் டயர் வெடித்த விபத்தில், பயணி ஒருவரின் கால் முறிந்தது.

சென்னையிலிருந்து கோவை சென்ற தனியார் பேருந்தின் டயர், சேலம் மாவட்டம் சாமியார் கிணறு பகுதியில் வெடித்துள்ளது.

இதில் பேருந்தின் தரைத்தளம் சேதமடைந்து, பேருந்தில் பயணித்த ஆனந்தராஜ் என்பவரது கால் முறிந்துள்ளது.

இதனையடுத்து அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com