பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..பின் வந்த இன்னொரு லாரியும் இடித்து கோரம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அரசு பேருந்தும், காய்கறி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

செங்கம் அடுத்த காந்திநகர் பகுதியில், சிதம்பரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், காய்கறி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. மேலும், அரசுப் பேருந்தை பின் தொடர்ந்த கோழி தீவனம் ஏற்றி வந்த மற்றொரு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்