நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - அடுத்தடுத்து எரிந்த ஊடக வாகனங்கள் - பதறவைக்கும் காட்சிகள்

x

நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - அடுத்தடுத்து எரிந்த ஊடக வாகனங்கள் - பதறவைக்கும் காட்சிகள்

மகாராஷ்டிராவில் 27 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பற்றி முழுவதுமாக எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனேவில் இருந்து அம்பெகான் பகுதிக்கு 27 பயணிகளுடன் சென்ற புகை வந்துள்ளது. அவ்வழியாக சென்ற மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர், பேருந்தில் இருந்து புகை வருவதை அதன் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், அதிலிருந்த பயணிகளை அவசரமாக கீழே இறக்கியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. பயணிகளுக்கு காயம் இல்லை என்றாலும், அவர்களின் உடைமைகள் தீக்கிரையாகின. குறைந்த மின்னழுத்தம் காரணமாக பேருந்தில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்