முதல் பரிசை வென்ற காளையின் கால் துண்டான சோகம் - மீண்டும் மீட்டு கொடுத்த மருத்துவர்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த பாபு என்ற விவசாயியின் காளை ஆந்திராவில் நடைபெற்ற

எருதுவிடும் விழாவில் கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. அப்போது திடீரென கால் முறிந்து உயிருக்கு போராடிய மாட்டினை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து மாட்டின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது.

மேலும் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.4 வகையான அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்