சென்னையை உலுக்கிய துயர சம்பவம்.. "என்னங்க சார் உங்க சட்டம்" - சிபிஎம் கடும் விமர்சனம்

    அண்ணா சாலை கட்டட இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், விபத்திற்கு தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com